×

பொதுநல வழக்கு: ரங்கராஜன் நரசிம்மன் நேர்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் நேர்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்கக் கூடாது உள்ளிட்ட 7 வழக்குகளை ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்தார். வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் ரூ.3.50 லட்சம் டெபாசிட் தொகையை திரும்ப அளிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரணைக்கு இன்னும் அனுமதிக்கவில்லை; அரசு தரப்பில் மட்டுமே பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என ஐகோர்ட் தெரிவித்தது. மேலும் ரங்கராஜன் நரசிம்மன் நேர்மைத்தன்மையை நிரூபித்தால் மட்டுமே டெபாசிட் செய்த ரூ.3.50 லட்சத்தை திருப்பி அளிக்க முடியும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post பொதுநல வழக்கு: ரங்கராஜன் நரசிம்மன் நேர்மைத்தன்மையை நிரூபிக்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rangarajan Narasimhan ,Chennai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED கோயில் தொடர்பான பொதுநல வழக்கு...